செய்திகள்

சந்தேக நபர்கள் நால்வர் கைது!!

Published

on

வாழைத்தோட்டம் பகுதியில் நபரொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

நேற்று (5) இரவு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் சந்தேக நபர்கள் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து, கொலைக்காக பயன்படுத்தப்பட்ட  4 கூரிய வாள்கள் , பயணித்த காரொன்றும் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் கடந்த 4 ஆம் திகதி இரவு நபர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கிக் கொலை செய்யப்பட்டிருந்தமை தொடர்பானது. .

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைத்தோட்டம்  பொலிஸார் மற்றும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version