செய்திகள்

பாகிஸ்தானில் கொல்லப்பட்டவரின் குடும்பத்தினர் விடுத்துள்ள உருக்கமான வேண்டுகோள்!

Published

on

பாகிஸ்தானில் இலங்கையர் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட நிலையில், தற்போது பல்வேறு அரசியல் தரப்பினரும் தமது அதிர்வலைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், உயிரிழந்த பிரியந்த குமாரவின் சகோதரர் தனது பேஸ்புக் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்,

அதில், தனது சகோதரர் கொல்லப்பட்ட காட்சிகள் அடங்கிய காணொளிகளை பகிர்வதை நிறுத்துமாறு ஊடகங்கள் மற்றும் சமூகவலைதளப் பயனாளிகளிடம் கோரியுள்ளார்.

மேலும், தனது சகோதரரின் கொலை தொடர்பான காணொளிகள் சமூகவலைத்தளங்களில் பரவி வருவது தனது குடும்பத்திற்கும், குறிப்பாக பிரியந்தவின் மனைவிக்கும், அவரது இரு பிள்ளைகளுக்கும் பாதிப்பையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்காரணமாக, ஏற்கனவே பகிரப்பட்டு வரும் காணொளிகளை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் கோரியுள்ளார்.

#SrilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version