செய்திகள்

காட்டு யானை தாக்கியதில் 6 பிள்ளைகளின் தந்தை ஒருவர் பலி!

Published

on

காட்டு யானை தாக்கியதில் 6 பிள்ளைகளின் தந்தை ஒருவர் பலியாகியுள்ளார்.

மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதுளை வீதி தும்பாலஞ்சோலை பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கனகன் முருகேசன் எனும் 60 வயது மதிக்கத்தக்க தந்தை ஒருவரே இவ்வாறு நேற்று இரவு காட்டுயானை தாக்கி உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யானை தாக்கி உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

#SrilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version