செய்திகள்

65 வயதில் காதலியைக் கரம்பிடித்த முதியவர்: 35 ஆண்டுகளிற்குப் பின் சக்ஸஸ் ஆனது காதல்

Published

on

கர்நாடகாவில் இளம் வயதில் காதலித்தவர்கள், முதிய வயதில் திருமண வாழ்க்கையில் இணைந்துள்ளனர்.

இளம்வயதில் கைகூடாமல் போன காதலுக்காக வேறொரு திருமணம் செய்யாமல் இருந்த முதியவர், கடந்து 35 ஆண்டுகளுக்கு பிறகு 65 வயதில் தனது காதலியைக் கரம்பிடித்துள்ளார்.

மைசூர் நகரிலுள்ள ஹெப்பாலா பகுதியைச் சேர்ந்த 65 வயதான சிக்கண்ணா என்பவரும் ஜெயம்மா என்பவரும் இளமைக் காலத்தில் தலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டாரிலும் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் ஜெயம்மா, வீட்டில் பார்த்த வேறொரு நபரை திருமணம் செய்துகொண்டு சென்றுள்ளார்.

ஆனால், ஜெயம்மாவின் திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை. குழந்தைகள் இல்லாததால், அவரது கணவர், ஜெயம்மாவை விட்டுபிரிந்து சென்றுவிட்டார்.

காதலி தன்னை விட்டு பிரிந்த விரக்தியில் பிறந்த ஊரை விட்டுவிட்டு வேறொரு இடத்தில் வசித்து வந்த சிக்கண்ணாவுக்கு, சமீபத்தில் தான் ஜெயம்மா தனியாக வசித்து வந்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து கடந்த கால நினைவுகள் பற்றி பகிர்ந்து கொண்ட சிக்கண்ணாவும், ஜெயம்மாவும், திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் 2 பேரும் மண்டியா மாவட்டம் மேல்கோட்டைக்கு சென்று நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டனர்.

காதலிக்காக 35 வருடம் காத்திருந்த இவரது காதல் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

#IndiaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version