செய்திகள்

கத்திமுனையில் கொள்ளை! – இளைஞன் மடக்கிப்பிடிப்பு

Published

on

கத்திமுனையில் கொள்ளையிட வந்த இளைஞர் அங்கிருந்தவர்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

ஜூரித்த சம்பவம் யாழ்ப்பாணம் – நல்லூர் – கைலாசபிள்ளையார் கோவிலடியில் அமைந்துள்ள சொக்கன் கடையில் இன்று மதியம் நடைபெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

சொக்கன் கடைக்குள் புகுந்த குறித்த இளைஞன் தனது பையில் மறைத்து வைத்திருந்த கத்தியை காண்பித்து பணம் கேட்டுள்ளார்.

இதன்போது, அங்கு நின்றவர்கள் குறித்த இளைஞனை மடக்கி பிடித்து கத்தியையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பொலிஸாருக்கு அறிவித்த நிலையில், அங்கு வந்த பொலிஸாரிடம் இளைஞனை ஒப்படைத்துள்ளனர்.

அதேவேளை, குறித்த இளைஞன் இன்று – காலை, அரியாலை மாம்பழம் சந்திக்கு அருகில் உள்ள புத்தக கடைக்குள் புகுந்து அங்கிருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அந்த பெண் கூக்குரல் எழுப்பியநிலையில் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

அதன் பின்பே நல்லூர் – சொக்கன் கடைக்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version