செய்திகள்

மின்தடையால் மின்தூக்கியில் சிக்கிய எம்.பிக்கள்!!!

Published

on

நாடாளுமன்றத்தின் மின்தூக்கியில் ஏற்பட்ட திடீர்கோளாறு காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் 20 நிமிடங்கள் வரை மின்தூக்கியில் சிக்கிக்கொண்டனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல ஆகியோரே மின்தூக்கியில் சிக்கியுள்ளனர்.

நாடு முழுவதும் மின் துண்டிக்கப்பட்ட போது நாடாளுமன்ற வளாகத்துக்கான மின்சாரமும் துண்டிக்கப்பட்டதுடன், இதன்போது மின்தூக்கியின் செயற்பாடும் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனிலிடம் வினவிய போது, ​​தானும் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவல ஆகியோரும் சுமார் 20 நிமிடம் மின்தூக்கியில் சிக்கியிருந்தோம்.

இதனால் தாம் கடும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்ததாகவும் உயிருக்கு பாரிய ஆபத்துக்களை எதிர்கொண்டதாகவும் தெரிவித்தார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version