செய்திகள்

தலைமன்னார்- ராமேஸ்வரத்துக்கான கப்பல் சேவை!!

Published

on

விரைவில் தலைமன்னார்- ராமேஸ்வரத்துக்கிடையிலான கப்பல் சேவையை  ஆரம்பிக்குமாறு த.தே. கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுவரும் வரவு-செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சரிடம் அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு இந்தியா தயாராகவுள்ள நிலையில் இலங்கையும் அதற்கான செயற்பாடுகளை விரைவாக செய்ய வேண்டும் . யுத்ததால் வெளியேறியவர்கள் நாடு திரும்ப விரும்புகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

யுத்தத்திற்கு முன்பு தலைமன்னாரில் இராமேஸ்வரத்திலிருந்து தலைமன்னாருக்கு கப்பல் சேவை ஒன்று நடைமுறையில் இருந்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version