செய்திகள்
யாழ்- நல்லூர் பகுதியில் பதிவாகியுள்ள எரிவாயு வெடிப்பு!!
இன்று யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியுள்ளது.
நல்லூர் கோவில் வீதியில் உள்ள வீடொன்றிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டில் சமைத்து கொண்டிருக்கும்போதே இவ்வாறு வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
அதன்பின் அயலவர்கள் எரிவாயு சிலிண்டரை அகற்றி தீயை அணைத்தமையினால் பாரிய சேதங்கள் எதுவும் ஏற்படாது தடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இதுவரை 34 சிலிண்டர்கள் இவ்வாறு வெடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login