செய்திகள்

சிலிண்டர் வெடிப்பு : பந்துல தலைமையில் கூடிய ஆலோசனை குழு!!

Published

on

தொடர்ந்து சிலிண்டர் வெடிப்பு சம்பவங்களால்  நாட்டில் பெரும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. இதனால் இது தொடர்பில் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தலைமையில் ஒரு ஆலோசனை குழு நேற்று (03) கூடியது.

பாராளுமன்றில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில், நாடு முழுவதும் இதுவரை 34 சிலிண்டர்கள் வெடித்து, மக்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.  காலந்தாழ்த்த் செயற்பட்டால் இதனால் பாதிப்புகளை குறைக்கலாம் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, சிலிண்டர்களில் பொருத்தப்படும் ஏனைய துணைகருவிகளாலும் இவ்வாறு விபத்து ஏற்பட்டிருக்கும் எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. எவ்வாறாயினும் கூட்ட இறுதியில் எவ்வித முடிகளும் எட்டப்படாமல் , இது தொடர்பான ஆய்வுகள் நிறைவடைய தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

குறித்த கூட்டத்தில், இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, லிற்றோ, லாப்ஸ் எரிவாயு நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை  அதிகாரிகள், பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள், பொலிஸ் அதிகாரிகள், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version