செய்திகள்

இன்று முதல் அமுலுக்கு வரும் புதிய சுகாதார வழிகாட்டல்கள்!!

Published

on

இன்று (01) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய சுகாதார வழிகாட்டல்கள் வௌியிடப்பட்டுள்ளன.

அதற்கிணங்க,

  • திருமண நிகழ்வுகளில் பங்குபற்றுவோரின் அதிகபட்ச எண்ணிக்கை 200 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
  • திறந்தவௌி கொண்டாட்டங்களில் 250 பேர் வரையில் கலந்துகொள்வதற்கு அனுமதி
  • திருமண நிகழ்வுகளில் மதுபானத்துடனான விருந்துபசாரங்களுக்கு தொடர்ந்தும் தடை
  • திரையரங்குகளில் ஒரு தடவையில் 75 வீதமானோருக்கு அனுமதி
  • மரண சடங்குகளில் 20 பேர் மாத்திரமே கலந்து கொள்ள அனுமதி
  • வழிபாட்டுத்தலங்களில் இடம்பெறும் நிகழ்வுகள் சுகாதார அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள வழிகாட்டல்களுக்கு அமைய முன்னெடுக்கப்பட வேண்டும்
  • வர்த்தக நிலையங்கள், மருந்தகங்கள், பல்பொருள் அங்காடிகளில் ஒரே தடவையில் மூன்றில் ஒருவீதமானோருக்கே அனுமதி. அத்துடன், அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை காட்சிப்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தல்

குறித்த தகவகவலுக்கமைய மக்கள் சுகாதார நடவடிக்கைகளை பேணுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

#SriLankaNews

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version