செய்திகள்

கோட்டா ஆட்சியில் சமையல் அறையில் கூட பாதுகாப்பில்லை- அனுர

Published

on

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவேன் எனக்கூறியே கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்தார்.

ஆனால் இன்று வீட்டுக்குள் சமையல் அறைக்குகூட பாதுகாப்பாக சென்றுவரமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.” – என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

ஜே.வி.பி. தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” மக்கள் மத்தியில் தற்போது உருவாகியுள்ள அச்சம் நீக்கப்பட வேண்டும். அதற்காக அரசு துரிதமாக செயற்பட வேண்டும். மாறாக குழுக்களை நியமித்து காலத்தை இழுத்தடிக்கக்கூடாது.” – எனவும் அவர் வலியுறுத்தினார்.

#SrilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version