செய்திகள்

மியன்மாரில் இருந்து அரிசி இறக்குமதி!!

Published

on

அரசாங்கத்திடம் இருந்து அரசாங்கத்திற்கு என்ற திட்டத்தின் கீழ்  வரையறுக்கப்பட்ட இலங்கை வர்த்தக கூட்டுதாபனம் அரிசி  இறக்குமதி செய்வதற்காக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன அவர்களால்  சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

குறித்த ஒப்பந்தம் பற்றாகுறையின்றி போதுமானளவு அரிசியை நுகர்வோருக்கு விநியோகிப்பதற்கும் , பாதுகாப்பான கொள்ளளவை பேணுவதற்கும் இயலுமான வகையில் 100000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு 2021 செப்டம்பர் 27 திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கியிருந்தது.

அதற்கமைய அரசாங்கத்திடம் இருந்து அரசாங்கத்திற்கு என்ற திட்டத்தின் கீழ் இலங்கை அரசாங்கம் மற்றும் மியன்மார் அரசாங்கம் இடையில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்ததின் அடிப்படையில் 20,000 மெற்றிக் தொன் அரிசியை , ஒரு மெற்றிக்தொன் 460 அமெரிக்க டொலர் என்ற அடிப்படையில் இலங்கை வர்த்தக கூட்டுதாபனத்தின் மூலம் இறக்குமதி செய்வதற்காக யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version