செய்திகள்

எதிர்கட்சித் தலைவரின் விசேட அறிவிப்பு!!

Published

on

உலக நாடுகளை அச்சுறுத்திவரும் ‘ஒமிக்ரோன்’ என்ற புதிய வகை கொரோனா வைரஸ் தொடர்பில் அரசு கூடுதல் கவனம் செலுத்தி, முன்னேற்பாடுகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

இன்று பாராளுமன்றத்தில் இது தொடர்பில் விசேட அறிவிப்பொன்றை விடுத்தபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்

வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் இரண்டு தடுப்பூசிகள் மற்றும் பூஸ்டர் டோஸ்களை ஏற்றியிருந்தாலும் அவர்கள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

டெல்டாவைவிட ஆபத்தாகக் கருதக்கூடிய ஒமிக்ரோன் பிறழ்வு எமது நாட்டுக்குள் பரவும் அபாயமும் இருக்கின்றது. எனவே, இதனை தடுப்பதற்கு சுகாதார தரப்பினரால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்.

தற்போது பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படுவது வரவேற்கத்தக்கது ஆனால் ஒரு வயது பகுதியினருக்கு மாத்திரமே இது வழங்கப்படுகிறது. எனவே அரசாங்கம் முன்வந்து தடுப்பூசி கிடைக்கபெறாத அனைவருக்கும் கிடைக்க வழி செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version