செய்திகள்

மீண்டும் சீனாவிடம் கையேந்தும் இலங்கை!!!

Published

on

300 மல்லியன் டொலரை மேலும் அரசாங்கம் சீனாவிடமிருந்து கடனாகப் பெற்றுக்கொள்ளவுள்ளது.

இவ்வாண்டின் ஆரம்பத்தில் செலாவணி பரிமாற்ற அடிப்படையில் இலங்கைக்கு கடன் வழங்க சீனா இணங்கியிருந்தது.

இந்த விடயம் தொடர்பில் அப்போதைய ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் கடந்த மார்ச் மாதம் ஊடக சந்திபொன்றில் கூறியிருந்தார்.

சீனாவிடமிருந்து கடன் பெற்றுக் கொள்ளும் யோசனைக்கு கடந்த வாரம் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் இந்த கடன் தொகையை பெற்றுக்கொள்ள முடியும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஓமான் மற்றும் இந்தியாவிடமிருந்தும் அரசாங்கம் கடன் பெற்றுக்கொள்வதற்கு முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

#SrilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version