செய்திகள்

யாழிலும் வெடித்து சிதறியது எரிவாயு சிலிண்டர்!!

Published

on

நாட்டில் பரவலாக சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் அண்மைக்காலமாக பதிவாகிவரும் நிலையில். வடக்கிலும் சில வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில், யாழ்ப்பாணம் – கந்தரோடை பகுதியில் உள்ள வீடொன்றில் இன்றையதினம் எரிவாயு சிலிண்டர் வெடித்துள்ளது. இந்த சிலிண்டர் சமையல் அறைக்கு வெளியே வைக்கப்பட்டிருந்தமையால் , அடுப்பு தீப்பிடித்து எரிந்த நிலையில், பெரிதாக பாதிப்புக்கள் எவையும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் கிளிநொச்சி – திருவையாறு பகுதியிலும் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நாட்டில் இந்த மாதத்தில் மாத்திரம் 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version