செய்திகள்

சோமாலியாவில் தொடரும் சோகம்- ஐவர் சாவு

Published

on

சோமாலியாவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 5 பேர் சாவடைந்துள்ளனர்.

சோமாலியாத் தலைநகரில் மேற்கத்தேய அதிகாரிகளைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அல் ஷபாப் அமைப்பு தனது வானொலியில், சோமாலியாவில் அல்-கொய்தாவுடன் தொடர்புடைய பயங்கரவாத குழுவினர் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர் எனவும், குறிப்பாக தலைநகர் மொகடி{வில் தொடர்ந்து தாக்குதல் நடாத்தி வருகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், சோமாலியாவின் தலைநகரிலுள்ள ஒரு பாடசாலையின் அருகே இன்று சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில், ஐந்து பேர் சாவடைந்துள்ளனர்.

சம்பவத்தில் 10 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், அல்கொய்தாவுடன் இணைந்த அல்-ஷபாப் அமைப்பு இக்குண்டுத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது.

#world

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version