செய்திகள்

சர்வதேச ஒத்துழைப்பு ஒருபோதும் கிடைக்காது! – அழுத்திக் கூறுகிறார் லக்‌ஷ்மன் கிரியல்ல

Published

on

” சிறுபான்மையின மக்களை புறக்கணிக்கும் அரசால் ஒருபோதும் சர்வதேச ஒத்துழைப்பை பெறமுடியாது.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர்,

” நல்லாட்சிமீது சர்வதேச சமூகத்துக்கு நம்பிக்கை இருந்தது. தேசிய கீதம்கூட தமிழில் இசைக்கப்பட்டது. இதனால் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஜி-7 நாடுகளின் தலைவர்கள்கூட உரிய இடத்தை வழங்கினர். ஆனால் இன்று என்ன நடக்கின்றது?

சிவில் அமைப்புகளுக்கு சுதந்திரம் இருக்க வேண்டும். ஆனால் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் அறிக்கை விட்டால், அது தொடர்பில் சிஐடிக்கு அழைக்கப்பட்டு விளக்கம்கோரும் நிலையும் உருவாகியுள்ளது. இந்நிலைமை மாறவேண்டும்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில்கூட இவ் விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.” – என்றார்.

#SriLankaNews

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version