செய்திகள்
பெருமளவான வெடிபொருட்கள் மீட்பு
யாழ்ப்பாணத்தில் காணி ஒன்றிலிருந்து நேற்று பெருமளவான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் – தென்மராட்சி வேம்பிராய் பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியில் இருந்தை குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
காணியின் உரிமையாளரால் குறித்த வெடிபொருட்கள் தொடர்பாக பொலிஸார் ஊடாக இராணுவத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்தே இராணுவத்தினர் அங்கிருந்த வெடிபொருட்களை மீட்டனர்.
You must be logged in to post a comment Login