செய்திகள்

நெடுஞ்சாலைகளில் அறிமுகமாகவுள்ள LANKA QR கட்டணமுறை!!

Published

on

திரவப் பணப் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கத்துடன் அதிவேக நெடுஞ்சாலைகளில்  LANKA QR கட்டணமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இக்கட்டண முறைமையை அமுலாக்குவதற்கு நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

குறித்த சேவையின் ஊடாக கையடக்கத் தொலைபேசிகளில் தொகையை உள்ளிட்டு எந்தவொரு வங்கியினதும் LANKA QR செயலியின் மூலம், நுழைவாயிலில் காணப்படும் QR குறியீட்டை ஸ்கேன் செய்து கட்டணத்தைச் செலுத்தச் முடியும்.

அதன்படி, இந்தக் கட்டண முறை எதிர்காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளில் உள்ள கட்டண அறவீட்டு நிலையங்களில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version