செய்திகள்

ஆயுதம் தாங்கிய முப்படையினர் பாதுகாப்பில்: வெளியானது அதிவிசேட வர்த்தமானி

Published

on

நாட்டின் சகல நிர்வாக மாவட்டங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய கடற்பரப்புகளில் பாதுகாப்பைப் பேணுவதற்காக, வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டின் அனைத்து ஆயுதம் தாங்கிய முப்படையினருக்கும் அழைப்பு விடுக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இன்று (22) முதல் அமுலாகும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 தாக்குதலைத் தொடர்ந்து, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஆயுதம் தாங்கிய படையினரை அமைதியைப் பேணுவதற்கு அழைப்பு விடுத்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது.

இதனையடுத்து ஒரு மாத காலத்துக்கு அமுலாகும் வகையில் ஒவ்வொரு மாதமும் 22 ஆம் திகதி இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version