செய்திகள்
ரயிலுடன் மோதுண்ட இளைஞர் பலி!
கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் மோதி இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.
மொரட்டுவை – கொழும்பு ரயில் மார்க்கத்தில் ரயிலுடன் மோதுண்டு இளைஞர் பலியானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தில் உரிரிழந்த 19வயதான இளைஞர் இரத்தினபுரி – நிவித்திகல பகுதியை சேர்ந்தவர் என பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது.
சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login