செய்திகள்

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!!

Published

on

தமிழகத்தில் கொரோனா மீண்டும் அதிகரித்துள்ளது.

இந்தியாவின் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 765 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று மட்டும் 12 பேர் சாவடைந்துள்ளனர் .

தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

புதிதாக 765 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தமாக பாதிக்கப்படோர் எண்ணிக்கை 27,19,515-ஆக அதிகரித்துள்ளது.

ஒருநாளில் மட்டும் 12 பேர் சாவடைந்ததால், இதுவரை மொத்தமாக சாவடைந்ததோரின் எண்ணிக்கை 36,361-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவிலிருந்து 879 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 26,74,327-ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரு நாளில் மட்டும் 1,00,998 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

#india

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version