செய்திகள்

பசிலுக்கு எந்த உரிமையும் இல்லை – விஜயதாஸ ராஜபக்ச!

Published

on

இலங்கையின் சொத்துக்களை வேறு நாடுகளுக்கு மாற்றுவதற்கு அமெரிக்கப் பிரஜையான பசில் ராஜபக்சவுக்கு உரிமை இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் அவர், யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவதற்கு கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தம் காரணமாக பசில் ராஜபக்சவை அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குமாறு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் பதவியைப் போன்று நிதியமைச்சர் பதவியையும் வகிக்க பசில் ராஜபக்சவுக்கு எந்த உரிமையும் இல்லை.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version