செய்திகள்

கடல்வழி பயண சுற்றுலா சேவை – யாழில் ஆரம்பம்

Published

on

சுற்றுலாத்துறையை விருத்தி செய்யும் நோக்கில் இதுவரை காலமும் இல்லாத கடல்வழி பயண சேவையொன்று யாழ்ப்பாணத்தை மையமாக வைத்து ஆரம்பிக்கப்படவுள்ளது.

எட்டுப் பேர் தங்கக்கூடிய நான்கு அறைகளைக் கொண்ட பாய்க்கப்பல் வடிவிலான இயந்திர ரக கப்பலில்
ஒருநாள் மற்றும் சில நாட்கள் கடலில் பயணிக்கக்கூடிய வகையில் இந்த சேவை பரீட்சார்த்தமாக டிசெம்பர் மாதம் 5ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் தெளிவுபடுத்தும் விசேட ஊடக சந்திப்பு யாழ். ஊடக அமையத்தில் இன்று மதியம் ஒரு மணியளவில் இடம்பெற்றது.

இதன்போது கருத்து தெரிவிக்கும்போதே தொழிலதிபர் சுப்பிரமணியன் மனோகரன் மேற்படி தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

காரைநகரில் இருந்து இதனை இந்த மாதத்தில் ஆரம்பிக்க இருந்தோம். ஆனால் காலநிலை மாற்றம் காரணமாக டிசம்பர் மாதம் 5 ஆம் திகதியிலிருந்து டிசம்பர் மாதம் 10ஆம் திகதி வரை பரீட்சார்த்தமாக
ஆரம்பிக்கவுள்ளோம்.

இதன் மூலம் அந்நியச் செலாவணி அதிகரித்து நாட்டிற்கு வருமானம் ஈட்டப்படுவதுடன் உள்ளூர்வாசிகளும் பயன்பெறுவர் – என்றார்.

#SrilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version