செய்திகள்

போராட்டம் நடத்தி அரசியல் செய்வதற்கான நேரமா இது..?

Published

on

கொரோனாவுடன் விளையாட வேண்டாம். போராட்டம் நடத்தி அரசியல் செய்வதற்கான நேரம் இதுவல்ல.” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் காணி அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மக்களை வீதிக்கு இறக்கி, அவர்களை வதைப்படுத்தி அரசியல் நடத்தும் நேரம் இதுவல்ல. அரசியல் செய்ய வேண்டும். ஆனால் மக்களை பணயம் வைக்க கூடாது. தேர்தல் வரட்டும். அப்போது மோதுவோம்.

அரசுக்குள் மோதல் என்கின்றனர். அவ்வாறு பெரிய பிரச்சினை இல்லை.

வரவு- செலவுத் திட்ட வாக்கெடுப்பின்போது அரசின் பலத்தை காணலாம். எனவே, வீதியில் இறங்கி ஆட்சியைக் கவிழ்க்கலாம் என்ற கனவை எதிரணி தலைவர் காணக்கூடாது.

நெருக்கடியான சூழ்நிலையில் மக்களை காக்க ஒத்துழைப்பு வழங்கவேண்டும். மாறாக இவ்வாறு செயற்படக்கூடாது.” – என்றார்.

#SrilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version