செய்திகள்

இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு- வளிமண்டலவியல் திணைக்களம்!

Published

on

இன்று நாட்டில் பல இடங்களில் பகல்  அல்லது இரவு வேளைகளில் இடியுடன்கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவ்வறிக்கையில் காலை வேளைகளில் மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் வடக்கில் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியங்கள் காணப்படுவதுடன். காலி , மாத்தறை மற்றும் அனுராதபுர மாவட்டத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கில் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கலாம்  எனவும் , சில குறித்த மாவட்டங்களுக்கு சேதங்களை குறைப்பதற்கான எச்சரிக்கைகளும் வழங்கப்பட்டுள்ளது.

கனமழையுடன் பலத்த காற்றும் வீசும் எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version