செய்திகள்

மீண்டும் நாளை வாக்குமூலம் வழங்கவுள்ள அருட்தந்தை சிறில் காமினி!

Published

on

அருட்தந்தை சிறில் காமினி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரிடம் இன்று ஆஜராகி வாக்குமூலம்  வழங்கியதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் வெளிநாடுகளில் உள்ள இலங்கை மக்களுடன் இடம்பெற்ற இணையவழி கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

அருட் தந்தை சிறில் காமினி உட்பட சிலர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில்  அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

இதனடிப்படையில் குறித்த விடயம் தொடர்பான விசாரணைக்கு  அவரை ஆஜாராகும்படி இரண்டு தடவைகள்  அழைப்பு விடுக்கப்பட்டது. இரண்டு தடவைகளும் அவர் ஆரஜாரகவில்லை.

அவர் அதற்கு கால அவகாசம் கோரிய நிலையில், இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட புலனாய்வுப் பிரிவு 1 இன் பொறுப்பதிகாரியின் அறிவுறுத்தலுக்கமைய சிறில் காமினி ஆஜாராகினார்.

மேலும், 7 மணித்தியாலயங்கள் தொடர் விசாரணையின் பின்னர் மீண்டும் நாளை சிறில் காமினி வாக்குமூலம் வழங்கவுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி குறிப்பிட்டார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version