செய்திகள்

IPL வீரர்களை கொண்டு களமிறங்குகிறது இந்தியா

Published

on

புதிய பயிற்றுவிப்பாளர்,புதிய தலைவர் மற்றும் IPL ல் சாதித்த வீரர்களை கொண்டு நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா களமிறங்ககுகிறது .

நியூசிலாந்து டி20 தொடருக்கு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

T 20 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிராக 3 ஆட்டங்கள் கொண்ட T 20 தொடரில் பங்கேற்கிறது. கார்த்திகை 17-ம் திகதி தொடங்கவுள்ள இந்த தொடர் கார்த்திகை 21-ம் திகதி நிறைவடைகிறது.

இதற்கான 16 வீரர்கள் அடங்கிய இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தலைவர் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகியதையடுத்து, புதிய அணி தலைவராக ரோஹித் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார். துணை தலைவராகக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் புதிய பயிற்றுவிப்பாளராக ராகுல் ராவிட் செயல்படுவர் எனவும் ICC அறிவித்துள்ளது.

இந்திய அணியின் விபரங்கள் :

ரோஹித் சர்மா (தலைவர்), கேஎல் ராகுல் (துணை தலைவர்), ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர்,சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (பந்து காப்பாளர் ), இஷான் கிஷன் (பந்து காப்பாளர் ), யுஸ்வேந்திர சஹால், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல், ஆவேஷ் கான், புவனேஷ்வர் குமார், தீபக் சஹார், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ்.

1 Comment

  1. Pingback: IPL 2024: வரலாற்றை முறியடித்த ஆட்ட நாயகனுக்கு ரூ.80 லட்சத்தில் தங்க சங்கிலி - tamilnaadi.com

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version