செய்திகள்

தரம் 10 – 13 கற்றல் செயற்பாடுகள் ஆரம்பம்

Published

on

அனைத்து பாடசாலைகளிலும் தரம் 10 – தரம் 13 வரையான மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் நாடளாவிய ரீதியில், இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொரோனா பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கல்விச் செயற்பாடுகள், தற்போது பகுதி பகுதியாக தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் கடந்த 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், தற்போது தரம் 10 முதல் 13 வரையான கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில், கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவிக்கையில்,

கற்றல் நடவடிக்கைகளை மேல ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் அனைத்து பூர்த்திசெய்யப்பட்டுள்ளன.
க.பொ.த சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகளை மேற்கொள்ளும் நோக்கில் இந்த வகுப்புக்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. – என்றார்.

பாடசாலைக்கு வருகைதரும் மாணவர்கள், முகக்கவசம் அணிதல், கைகளைக் கழுவுதல் மற்றும் சமூக இடைவெளியைப் பேணுதல் உள்ளிட்ட சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுவது கட்டாயமாமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version