இந்தியா

நாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை??

Published

on

புதுசேரியில் கன மழையால் காரணமாக பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் புதுசேரியில் தொடர் கனமழையின் காரணமாக நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரு தினங்களுக்கு 9 முதல் 12 ஆம் வகுப்பு பாடசாலைகள்,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் புதுச்சேரியில், 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பாடசாலைகள் திறக்கபட இருந்த நிலையில் மழையின் காரணமாக பாடசாலைகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதென புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் 1 முதல் 8 ஆம் வகுப்புகள் வரை பாடசாலைகள் திறப்பு திகதி தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பல மாநிலங்களில் கனமழையால் மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பலர் சாவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#india

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version