செய்திகள்

இந்தியாவில் 40 பேரை கொன்ற கள்ளச்சாராயம்!!

Published

on

இந்தியாவில் 40 பேரை  கள்ளச்சாராயம் கொன்றுள்ளது.

இந்தியா பீகாரில் கடந்த சில நாட்களில் கள்ளச் சாராயம் பருகி சாவடைந்தவர்களின் எண்ணிக்கை 40-யைக் கடந்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றது.

பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் இருப்பதால் பெரும்பாலான இடங்களில் கள்ளச்சாராயம் விற்பனை அதிகரித்துள்ளது.

முக்கியமாக கோபால்கஞ்ச் மற்றும் மேற்கு சாம்பரன் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் பருகி 30-க்கும் மேற்பட்டோர் சாவடைந்த சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்போது பேட்டையா மாவட்டத்தில் கள்ளச்சாரயம் பருகிய 4 பேர் பசாவடைந்துள்ளார். இதனால், கடந்த 3 நாட்களில் மட்டும் கள்ளச்சாராயம் பருகிர்யவகளில் 40-க்கும் மேற்பட்டோர் சாவடைந்துள்ளனர்.

கள்ளச் சாராயம் தயாரித்தால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

கள்ளச்சாராயத்தை ஒழிக்க தவறியதற்காக காவல் நிலைய பொறுப்பாளர்கள் இருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

#INDIA

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version