செய்திகள்

அமெரிக்காவில் குழந்தைகளுக்கு தடுப்பூசி

Published

on

அமெரிக்காவில் குழந்தைகளுக்கு கொரோனாத் தடுப்பூசி போடுவதற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

அமெரிக்காவில் 5 வயது முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு கொரோனாவுக்கு எதிராக பைசர் தடுப்பூசி போடுவதற்கு எப்.டி.ஏ. என்னும் உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் அங்கீகாரம் அளித்துள்ளது.

இதன்காரணமாக 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள், கொரோனாத் தடுப்பூசி செலுத்துவதற்கு வழிபிறந்துள்ளது. அமெரிக்காவில் 2 கோடியே 80 இலட்சம் குழந்தைகள் இந்தத் தடுப்பூசியை செலுத்திக்கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

#world

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version