செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மருத்துவமனை மீது தீவிரவாதிகள் தாக்குதல்

Published

on

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனை மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடுநடத்தியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜம்மு காஷ்மீரில் கடந்த நாட்களாகவே பொதுமக்கள் மீதும்  வியாபாரிகள் மீதும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்கள்.

பெமினா எனுமிடத்தில் உள்ளது ஸ்கிம்ஸ் மருத்துவமனையை குறிவைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அங்கு சில பகுதியில் தீ பற்றியபோது முதலில் பொலிஸார் இது தீ விபத்து என நினைத்துள்ளனர்.

பின்னர் தான் அது தீவிரவாதத் தாக்குதல் என உறுதிப்படுத்தி தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மருத்துவமனை அருகிலிருந்து தங்கும் விடுதிகளை பாதுகாப்புப் படையினர் உடனே தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்நிலையில் இந்தத் தாக்குதலில் ஒருவர் காயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புப் படை குவிக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டது .

அத்தோடு உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீருக்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் .

இந்நிலையில் அங்கு தாக்குதல் நடத்தப்பட்டது பொதுமக்களிடையில் பரபரப்பை எட்டப்படுத்தியுள்ளது.

#india

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version