செய்திகள்

அவுஸ்திரேலியாவில் தேடப்பட்டு வந்த சிறுமி பொலிஸாரால் மீட்பு

Published

on

அவுஸ்திரேலியாவில் கடந்த 18 நாட்களாகத் தேடப்பட்டு வந்த சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த 04 வயது சிறுமி கிளியோ குடும்பத்தினருடன் கர்னர்வோன் பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளார். இரவில் பெற்றோருடன் கூடாரத்தில் உறங்கிய கிளியோ மறுநாள் காலை மாயமானார்.

வான்வழி, நிலவழி மற்றும் கடல் வழியாக சிறுமியைத் தேடும் பணி இடம்பெற்றது. சிறுமி தொடர்பான தகவல்களை வழங்குவோருக்கு ஐந்தரை கோடி ரூபாய் பரிசுத்தொகையை பொலிஸார் அறிவித்தனர்.

இந்நிலையில், இரகசியத் தகவலின் அடிப்படையில், சிறுமி காணாமல் போன இடத்தில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவிலுள்ள வீட்டின் கதவை உடைத்து சோதனையிட்ட பொலிஸார் குறித்த சிறுமியை பத்திரமாக மீட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 18 நாட்களாகத் தேடப்பட்டு வந்த சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த 04 வயது சிறுமி கிளியோ குடும்பத்தினருடன் கர்னர்வோன் பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளார். இரவில் பெற்றோருடன் கூடாரத்தில் உறங்கிய கிளியோ மறுநாள் காலை மாயமானார்.

வான்வழி, நிலவழி மற்றும் கடல் வழியாக சிறுமியைத் தேடும் பணி இடம்பெற்றது. சிறுமி தொடர்பான தகவல்களை வழங்குவோருக்கு ஐந்தரை கோடி ரூபாய் பரிசுத்தொகையை பொலிஸார் அறிவித்தனர்.

இந்நிலையில், இரகசியத் தகவலின் அடிப்படையில், சிறுமி காணாமல் போன இடத்தில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவிலுள்ள வீட்டின் கதவை உடைத்து சோதனையிட்ட பொலிஸார் குறித்த சிறுமியை பத்திரமாக மீட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

#WORLD

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version