செய்திகள்

கொலம்பியாவில் நிலச்சரிவு- 11 பேர் சாவு

Published

on

கொலம்பியாவில் நரினோ மாகாணத்தில் உள்ள மலாமா மாவட்டத்தின் மலைப்பகுதியில் நேற்று பெய்த கனமழை காரணமாக கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது.

கொலம்பியாவின் நரினோ மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இதனால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், மலாமா மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் பாரிய நிலச்சரிவு ஏற்பட்டது.

மலையடிவாரத்தில் உள்ள வீடுகள் நிலச்சரிவில் சிக்கியதால், வீடுகளில் வசித்துவந்த பலர் மண்ணுக்குள் புதைந்துள்ளனர் என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நிலச்சரிவில் சிக்கிய 11 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.

ஆனாலும், இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 11 பேர் சாவடைந்ததாகவும் ,காணாமல் போன 20 பேரின் நிலை என்ன என்பது தெரியவில்லை என அங்கிருந்து அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தர்.

அவர்களை தேடும் பணிகளை மீட்புக்குழுவினர் ஈடுபட்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

#world

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version