செய்திகள்

பங்காளிகளின் கருத்துகள் எமக்கு முக்கியம் இல்லை! – ரோஹித அதிரடி

Published

on

கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் அமைச்சரவையில் திருட்டுத்தனமாக பிரேரணை நிறைவேற்றப்படவில்லை – என்று அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” நானும் அமைச்சரவையில் இருக்கின்றேன். விமல் வீரவன்ச குறிப்பிடுவதுபோல அமைச்சரவையில் திருட்டுத்தனமாக எதையும் செய்யவில்லை. அவ்வாறு செய்யவும் முடியாது.

அரசுக்குள் பிரச்சினைகள் இருந்தால் அவை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இடங்கள் உள்ளன. அமைச்சரவைக் கூட்டம், ஆளுங்கட்சி நாடாளுமன்றக்குழுக் கூட்டம் போன்ற இடங்கள் இருக்கையில் வெளியில் சென்று பேசுவது, ஏற்புடைய நடவடிக்கை அல்ல.

நாம் தான் அரசுக்குள் தலைமைக்கட்சி. பங்காளிக்கட்சிகளின் கருத்துகள் எமக்கு முக்கியம் இல்லை. கூட்டணி என்றால் சிறு குழப்பம் இருக்கும். எப்படி இருந்தாலும் நாம் முன்னோக்கி பயணிப்போம்.” -என்றார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version