செய்திகள்
சமையல் எரிவாயுத் தட்டுப்பாடு: நுகர்வோர் குற்றச்சாட்டு
சமையல் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது என நுகர்வோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் சில இடங்களில் தட்டுப்பாடு நிலவுகிறது எனவும் சில இடங்களில் சமையல் எரிவாயு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதேவேளை குருணாகல் உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று சமையல் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு நிலவியதாகத் தெரியவந்துள்ளது.
You must be logged in to post a comment Login