செய்திகள்

பங்காளிகளை ஓரங்கட்டினால் அழிவு ஆரம்பம்!! – அரசுக்கு எச்சரிக்கை

Published

on

“பங்காளிக்கட்சிகளை ஓரங்கட்டுவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன முற்படுமானால் அங்குதான் ‘அரசியல் அழிவு’ ஆரம்பமாகும்.” – என்று இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் உப தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வீரசுமன வீரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மாற்று அரசியலுக்கான மேடையை நாமே உருவாக்கிக்கொடுத்தோம். அதன் ஊடாகவே ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற கட்சி தோற்றம் பெற்றது. இதனை அக்கட்சி உறுப்பினர்கள் மறந்துவிடக்கூடாது.

சிறு கட்சிகள் என்பதால் எம்மை தோற்கடிக்க , புறக்கணிக்க முற்பட்டால், அவ்வாறு முற்படுபவர்களுக்கே அரசியல் ரீதியில் அழிவு ஏற்படும். வரலாற்றில் அவ்வாறே நடந்தும் உள்ளது.” – என்றார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version