செய்திகள்

நவம்பர் முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி! – தனிமைப்படுத்தல் தேவையில்லை

Published

on

கொரோனா ஆபத்து குறைந்த நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு நவம்பர் முதலாம் திகதி முதல் தாய்லாந்து மீண்டும் அனுமதி வழங்கவுள்ளது.

இரண்டு தடுப்பூசிகளும் முழுமையாக வழங்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கே நவம்பர்  முதலாம் திகதி முதல் அனுமதி வழங்கப்படவுள்ளது.

“ஆபத்து குறைந்த” நாடுகள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள நாடுகளில் இருந்து நாட்டுக்குள் அனுமதிக்கப்படும் குறித்த பயணிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டது தேவையில்லை.

இதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக டிசம்பர் முதலாம் திகதி முதல் பார்கள் மற்றும் உணவகங்கள் திறக்கப்படவுள்ளன. ஏழு மாத கட்டுப்பாடுகளுக்கு பின் இந்த முடக்கம் முடிவுக்கு வருகிறது.

இதேவேளை, நாட்டுக்குள் அனுமதிக்கப்படும் அனைத்து பயணிகளும் தங்கள் QR குறியீடு மூலம் நோய் கட்டுப்பாட்டுத் துறையால் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று விமான நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.

#World

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version