செய்திகள்

TID யில் யாழ்.மாநகரசபை உறுப்பினர்!

Published

on

யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்திபன் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு (TID) இன்றையதினம் அழைக்கப்பட்டுள்ளார்.

யாழ். மாநகரில் தண்டப்பணம் அறவிடும் நடைமுறையை மேற்கொள்வதற்கு நிறுவப்பட்ட யாழ்ப்பாணம் மாநகர காவல் படையின் உத்தியோகத்தர்கள் ஐவக்கும் சீருடை வடிவமைத்து பெற்றுக்கொடுத்தமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

இன்று முற்பகல் 10.30 மணிக்கு பயங்காரவாத விசாரணைப் பிரிவின் யாழ்ப்பாணம் அலுவலகத்துக்கு சமுகமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

யாழ் மாநகரத்தை தூய்மைகப் பேணுவதற்காக மாநகர காவலர்களாக மாநகர சபை ஊழியர்கள் ஐவர் சீருடை அணிந்து கடந்த ஏப்ரல் மாதம் கடமைக்கு அமர்த்தப்பட்டனர்.

குறித்த உத்தியோகத்தர்கள் அணிந்திருந்த சீருடை தமிழீழ விடுதலைப் புலிகளின் காவல்துறையின் சீருடைக்கு ஒத்தது என சர்ச்சைகள் எழுந்தன.

இச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில். தற்போது யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் வரதராசா பார்த்திபன் சீருடையை வடிவமைத்து பெற்றுக்கொடுத்தமை தொடர்பில் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version