செய்திகள்

குடும்பத்தகராறால் ஏற்பட்ட விபரீதம்!

Published

on

யாழ்ப்பாணம்- இளவாலைப் பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட குடும்பத்தகராறு கோடாரி வெட்டில் முடிந்தமையால், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இளவாலை – உயரப்புலம் பகுதியில், இடம்பெற்ற இச்சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்குறித்த பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞனும்; 30 வயதுடைய நபருமே, இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

உறவினர்களுக்கு இடையிலான முரண்பாடு நேற்றைய தினம் இரவு முற்றிய நிலையில் இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை சம்பவம் தொடர்பில், இளவாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

#SrilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version