செய்திகள்
நாட்டில் பலத்த மழைக்கு வாய்ப்பு!
நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழை பெய்வதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றன என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
மேலும், வங்காள விரிகுடா கடற்பரப்பில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
அதன்படி, நாளை வியாழக்கிழமை, நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்களில் நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழையுடனான வானிலை நிலவக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் எதிர்வுகூறியுள்ளது.
You must be logged in to post a comment Login