செய்திகள்

சுமந்திரனுக்கு செருப்பு மாலை அணிவித்து கொடும்பாவியும் எரிப்பு!

Published

on

எதிர்பைத் தெரிவிக்கும் முகமாக சுமந்திரனுக்கு செருப்பு மாலை அணிவித்து கொடும்பாவியும் எரிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை குருநகர் உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏசுமந்திரனுக்கு எதிராக இன்றைய தினம் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, குருநகர் பகுதியில் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டு ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் குறித்த போராட்டத்தில் பங்குபற்றியிருந்தனர்.

அத்துடன் போராட்டத்தின் முடிவில் சுமந்திரனின் உருவப் பொம்மைக்கு பழைய செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு, எரிக்கப்பட்டது.

சுமந்திரனின் உருவப் பொம்மைக்கு பழைய செருப்பு மற்றும் கல்லு, கழிவிப்பொருட்களால் தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உள்ளூர் இழுவை மடிதொழில் தடை செய்யப்பட வேண்டும் என அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார். இக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தே குருநகர் வல்வெட்டித்துறை மீனவர்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

#SrilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version