செய்திகள்

சுமந்திரனுக்கு எதிர்ப்பு – குருநகரில் ஹர்த்தால்!

Published

on

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில், உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்களால் கறுப்புக் கொடி கட்டி ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உள்ளூர் இழுவை மடிதொழில் தடை செய்யப்பட வேண்டும் என அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தே குருநகர் வல்வெட்டித்துறை மீனவர்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குருநகர் பகுதியில் கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டு ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

குருநகர் பகுதியில் அனைத்து கடைகளும் மூடப்பட்டு ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருவதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் உருவப் பொம்மையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version