செய்திகள்

அதிகாலையில் தீ விபத்து-நால்வர் உடல் கருகிப் பலி

Published

on

இந்தியத் தலைநகர் புது டில்லியில் உள்ள அடுக்குமாடி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பலியாகினர்.

டில்லியின் பழைய சீமாபுரி பகுதியில் 3 மாடிகளை கொண்ட அடுக்குமாடி வீடு உள்ளது.

அடுக்குமாடி வீட்டில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

வீட்டின் 3ஆவது மாடியில் உள்ள அறையில் தூங்கிக்கொண்டிருந்த 4 பேர் தீவிபத்தில் சிக்கிக்கொண்டனர்.

இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு படையினருக்கு அதிகாலை தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீவிபத்து ஏற்பட்ட வீடு உள்ள பகுதிக்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் வீட்டில் பரவிய தீயை அணைத்தனர்.

தீயணைப்பு வருவதற்கு முன்னர் வீட்டின் 3-வது மாடியில் தூங்கிக்கொண்டிருந்த 4 பேரும் தீ விபத்தில் சிக்கி உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த  பொலிஸார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#india

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version