செய்திகள்

பல்கலைக்கழகங்கள் திறப்பு குறித்து வெளியான அறிவிப்பு

Published

on

அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் கட்டம் கட்டமாக அரச பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

மீண்டும் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான திகதிகளை தீர்மானிப்பதற்கான அனுமதி அந்தந்த பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

முதல் கட்டத்தின் கீழ், கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்று இரு வாரங்கள் கடந்த மாணவர்கள் மட்டுமே விரிவுரைகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

முதல் கட்டத்தின் கீழ் 25 சதவீத மாணவர்களுடன் மட்டுமே கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

#SrilankaNews

Exit mobile version