செய்திகள்

புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இடத்திலிருந்து ஆர்பிஜி லோஞ்சர் மீட்பு!

Published

on

வயல் பிரதேசத்தில் கைவிடப்பட்டிருந்த ஆர்பிஜி லோஞ்சர் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள நெடுஞ்சேனை வயல் பிரதேசத்தில் கைவிடப்பட்டிருந்த ஆர்பிஜி லோஞ்சரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை உழவு இயந்திரம் மூலம் வயல் உரிமையாளர் உழவு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்து ஆர்பிஜி லோஞ்சர் ஒன்று நிலத்திலிருந்து வெளியே வந்துள்ளது.

இதனையடுத்து, பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து, பொலிஸார் சென்று குறித்த ஆர்பிஜி லோஞ்சரை மீட்டுள்ளனர்.

இதேவேளை கடந்த காலங்களில் இந்த பகுதி புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியாக இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

#SrilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version