செய்திகள்

உயிரைப் பணயம் வைத்து நாயைக் காப்பாற்றிய நபர் (வீடியோ)

Published

on

அமெரிக்கா- ஃப்ளோரிடா மாகாணத்தின் போர்ட் லாடர்டெய்ல் என்ற கடற்கரையில் கடலில் தத்தளித்த நாய் ஒன்றினை ஜக்கேப் டூடுயிட் என்பவர் தனது உயிரைப் பொருட்படுத்தாமல் கடலுக்குள் குதித்து காப்பாற்றியுள்ளார்.

குறித்த நாய் யாருடையது என்று தெரியாமல் இருந்த நிலையில், அதன் கழுத்தில் இருந்த பெல்ட்டில் அதன் உரிமையாளரின் விபரம் இருந்துள்ளது.

இதனை அவதானித்த ஜக்கேப் அதன் உரிமையாளரிடம் தகவல் கூறியதோடு, உரிமையாளரிடம் நாயை ஒப்படைத்துள்ளார்.

உரிமையாளர் தனது குடும்பத்துடன் நாய்க்குட்டியை அழைத்துக்கொண்டு, படகில் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது,எதிர்பாராத விதமாக நாய்க்குட்டி படகிலிருந்து தவறி கடலில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கரை திரும்பியவர்கள் வீட்டிற்கு வந்தபிறகும் நாயுக்குட்டி இருக்கிறதா என்பதை கவனிக்கவில்லை. நாய்குட்டியைக் காப்பாற்றியவரின் அழைப்பு வந்த பிறகு உண்மை நிலவரம் தெரியவந்துள்ளது.

உயிரைப் பணயம் வைத்து நாயைக் காப்பாற்றிய நல்ல உள்ளம் படைத்தவரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

#WorldNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version