செய்திகள்
கரும்பூஞ்சை நோயால் நாட்டில் முதல் மரணம்!!
நாட்டில் கரும்பூஞ்சை நோயால் முதலாவது மரணம் பதிவாகியுள்ளது.
காலி – கராப்பிட்டிய மருத்துவமனையில் இந்த முதல் மரணம் பதிவாகியுள்ளது.
எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபர் ஒரு வாரத்துக்கு முன்னரே உயிரிழந்துள்ளார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போதே அவருக்கு கரும்பூஞ்சை நோய் ஏற்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
இதேவேளை, கொரோனாத் தொற்று பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள விளைவுகளில் கரும்பூஞ்சை நோயும் பிரதானமான ஒன்றென்பது குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login