செய்திகள்

கிரே பட்டியலில் தொடர்ந்து நீடிக்கிறது பாகிஸ்தான்

Published

on

பாகிஸ்தான் பயங்கரவாத நிதி தடுப்பு நடவடிக்கையில் தோல்வியடைந்துள்ள நிலையில், கிரே பட்டியலில் தொடர்ந்தும் இடம்பெற்றுள்ளது.

எப்.ஏ.டி.எப் எனப்படும் நிதி நடவடிக்கை பணிக்குழு, பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி அளிப்பதைத் தடுத்து நடவடிக்கை எடுப்பதற்கான கண்காணிப்பு அமைப்பாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில், குறித்து குழு இத்தகவலை வெளியிட்டுள்ளது

பிரான்ஸில் இயங்கி வரும் இந்த அமைப்பு பயங்கரவாத நடவடிக்கைகளை ஆதரிக்கும் நாடுகளை இரு வகைகளாகப் பிரிக்கின்றது.

கறுப்புப் பட்டியல் மற்றும் கிரே பட்டியல் என இரு வகைகளாகப் பிரிக்கும் இந்தப் பட்டியலில், பயங்கரவாதத்தை ஒழிக்காத நாடுகள் மற்றும் அதற்கு ஆதரவு வழங்கும் நாடுகள் இடம்பிடித்துள்ளன.

இந்நிலையில், லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதை பாகிஸ்தான் தடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், பாகிஸ்தானை கிரே பட்டியலில், எப்.ஏ.டி.எப் அமைப்பு நீடித்து அறிவிப்பினை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version